ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்

தமிழ்ச் சூழலில் ஒரு சராசரி மனிதன் அறுபதாண்டுகள் நலமாக வாழ்வதற்கும் ஓர் எழுத்தாளன் வாழ்வதற்கும் வித்தியாசங்கள் உண்டு. அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தாலொழிய அந்தக் காலப் பரப்பைப் பெரிய சிக்கல்களின்றிக் கடப்பது சிரமம். ஜெயமோகன், சிக்கலின்றிக் கடந்தார் என்று சொல்ல முடியாது. அவருக்குப் பத்தாண்டுகள் சிறியவன் என்ற அளவிலேயே, அவர் மீது திணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், அக்கப்போர்கள், திரிபுகள், காழ்ப்புகள், வன்ம வெளிப்பாடுகள், ஆவேசத் தாக்குதல்கள், புரணிகள் எனப் பலவற்றைக் கண்டிருக்கிறேன். நான் கண்டவற்றைக் காட்டிலும் அதிகமாகத்தான் இருந்திருக்கும் என்ற ஊகத்தில்தான் … Continue reading ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர்